search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடார் சங்கம்"

    • பெருந்தலைவர் காமராஜர் பற்றி இனிமேல் அவதூறாக பேசமாட்டேன் என்று ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
    • 24-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    சென்னை:

    நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் சென்னை போரூர் நாடார் சங்க திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் தலைமை தாங்கினார்.இதில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன் தமிழ்நாடு நாடார் சங்க பொதுச் செயலாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் வீ.ஆனந்தராஜ், தட்சணமாற நாடார் சங்கசென்னை கிளை தலைவர் செல்வராஜ் நாடார், திருவல்லிக்கேணி நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மாவட்டத் தலைவர் வைகுண்டராஜ், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் த.விஜயகுமார், கோயம்பேடு மதுரவாயல் நாடார் சங்க பொதுச் செயலாளர் ரஸ்னா ராமச்சந்திரன் உள்பட 70-க்கும் மேற்பட்ட நாடார் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட னர்.

    கூட்டத்தில், நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை வன்மை யாக கண்டிக்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்கள் பற்றியும் இனிமேல் அவதூறாக பேசமாட்டேன் என்று வருகிற 21-ந்தேதிக்குள் ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் அவரது வீட்டை 24-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

    திருவொற்றியூர்:

    தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காத கவர்னரை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 3 மணி அளவில் கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தட்சிணாமாறநாடார் சங்க சென்னை இயக்குனர் என்.ஏ தங்கதுரை, ஆர் கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், திருவொற்றியூர் பகுதி முத்துக்குமார், நிர்வாகிகள், கருப்பையா, பாக்யராஜ் சுப்பிரமணி வெள்ளைச்சாமி, சேவியர், சிவகுமார், பத்மநாபன், ஸ்டாலின், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, மீனா, ஆனந்தி, அனிதா மற்றும் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார்.
    • கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க 2022 -25-ம் ஆண்டுக்காண நிர்வாக குழுவினை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பசுவந்தனை சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

    கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். உற வின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான ஆர்.எஸ். ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரைட் வே குளோபல் மார்க்கெட்டிங் சண்முகராஜா வரவேற்று பேசினார்.

    சட்ட நகல் எரிப்பு போராட்ட வீரர் நாஞ்சில் குமார் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் எம்.எஸ்.எம்.ஆர். ராஜசேகர், ராஜன் மேட்ச் வொர்க்ஸ் ராஜவேல், மகாலட்சுமி மேட்ச் ஒர்க்ஸ் ஜெயபிரகாஷ், காமாட்சி மேட்ச் ஒர்க் சுரேஷ், ஸ்ரீ கண்ணன் லாரி சர்வீஸ் ரத்னாகரன், அரசன் அண்ட் கோ நெல்லையப்பன், ஆரா செல்டர்ஸ் ஜேசுமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் குறித்தான சட்ட ஆலோசனைகளை வக்கீல் செல்வம் மற்றும் ரத்தினராஜா, ஆகியோர் வழங்கினர்.

    கூட்டத்தில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வத்திற்கு ஆதரவு கேட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.

    • நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்ம நாபன் நாடார் தலைமையில் கூட்டம் நடந்தது
    • ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.

    ஆலந்தூர்:

    நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்க ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்மநாபன் நாடார் தலைமையில் இன்று நடந்தது.

    கொட்டிவாக்கம் முருகன், ஆலந்தூர் கணேசன், சந்திரசேகர பாண்டியன், ராஜ்குமார், சுந்தரேஸ்வரன் ,மின்னல் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.

    பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

    காமராஜர் குறித்து அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது. அவர் வருத்தம் தெரிவிக்கும் வரையில் காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்துவது, அனைத்து போராட்டங்களையும் தலைவர் த.பத்மநாபன் நாடார் தலைமையில் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன் ஜெயபால் நாடார், தங்கமுத்து நாடார், கொட்டிவாக்கம் முருகன், சநதிரசேகர பாண்டியன் நாடார், சுந்தரேஸ்வரன் நாடார், மாரி தங்கம் நாடார், ஆலந்தூர் கணேசன் நாடார், பூவை ஜெயக்குமார் நாடார், மின்னல் ஸ்டீபன் நாடார், முத்து ரமேஷ் நாடார், உத்திர குமார் நாடார், ஆனந்தராஜ் நாடார், மனோகரன் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×